ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் 4 நாள் பயணமாக இந்தியா வருகை : டெல்லியில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
Jun 6 2023 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நான்கு நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று அவர் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் ஐடெக்ஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் போரிஸ் பிஸ்டோரியஸ் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து நாளை மும்பை செல்லும் அவர், மேற்கு கடற்படை தளம் மற்றும் மாசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆகியவற்றைப் பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.