இலங்கைக்கு அளித்த ரூ.8,200 கோடி கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு : இலங்கையின் வேண்டுகோளை ஏற்று சலுகை வழங்கியது இந்தியா
May 31 2023 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கைக்கு அளித்த 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, இந்தியா சலுகை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா 32 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் அளித்து, அவற்றின் ஒரு பகுதியாக, 8 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வழங்கியது. மேலும் கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, இந்தியா அளித்த 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.