ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
May 31 2023 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரியும் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.