புதுச்சேரி பொதுப்பணிதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடலில் இறங்கி போராட்டம்
Mar 28 2023 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி பொதுப்பணிதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பொதுப்பணி துறையில் கடந்த 2015ம் ஆண்டில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள், கடந்த 2016ம் ஆண்டில் நடந்த சட்டபேரவை தேர்தலின் போது பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே பொதுப்பணித்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்கள் 700 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில் பணி வழங்கப்படாத மீதமுள்ள ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி 200க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கடற்கரையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.