இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்
Mar 28 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய -பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் செக்டாரான ரஜதல் பகுதியில் இருந்து பறந்து வந்த கருப்பு நிற ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், பிஎஸ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ட்ரோனை சோதனை செய்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ட்ரோனோடு இருந்த வெள்ளை நிற பையில் 2 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு சிறிய டார்ச் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்திய - பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தானின் உளவு ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்துப்பட்டுள்ளது.