வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருந்ததாக பிரதமருக்கு மாலை அணிவித்து பாஜக தேசிய தலைவர் நட்டா வாழ்த்து
Mar 28 2023 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருந்ததாக பிரதமர் நரேந்திரமோடிக்கு மாலை அணிவித்து பாஜக தேசிய தலைவர் நட்டா வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி நீடித்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நாட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாகலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட 3 வடகிழக்கு மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் தேர்தலின் வெற்றிக்கு அடித்தளமாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டதாக கூறி மாலை அணிவித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நன்றி தெரிவித்தார்.