வீட்டின் மீது கல் வீசியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை வேண்டாம் : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள்
Mar 28 2023 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய பழங்குடியின மக்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். தவறான தகவலின்பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள எடியூரப்பா, இந்த விவகாரத்தை அமைதியாக கையாள வேண்டும் எனக் கூறியுள்ளார். அதனால் யாரையும் கைதுசெய்ய வேண்டாம் என போலீசிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.