அடுத்த கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை பாடப் புத்தகங்கள் : மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
Mar 28 2023 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடப் புத்தகங்களை மாற்றம் செய்வதற்கான பணி நடைபெற்று வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி பள்ளி பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவதாகவும், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட NCERT பாடப்புத்தகங்கள் அடுத்த 2024-25-ம் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.