ஆங்கில வழிப் பள்ளியில் ஆணுறை பாக்கெட்டுகள், மதுபான பாட்டில்கள் - குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய சோதனையில் கிடைத்த அதிர்ச்சி
Mar 27 2023 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் உள்ள ஆங்கில வழிப் பள்ளி ஒன்றில் ஆணுறை பாக்கெட்டுகள், மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய திடீர் சோதனையில், பள்ளித் தலைமையாசிரியர் அடிக்கடி செல்லும் அறையில் இருந்து இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட ஒரு மதத்தின் பிரச்சாரப் பொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஏராளமான வெளிநாட்டு மதுபான பாட்டில்களை கைப்பற்றியது தொடர்பாக பள்ளி உரிமையாளர் மீது கலால்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.