நேபாளத்தில் 2 விமானங்கள் மோதிக்கொள்ள இருந்த விபத்து தவிர்ப்பு - கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
Mar 27 2023 9:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானமும் நேபாள ஏர்லைன்ஸ் விமானமும் விபத்தைச் சந்திக்கும் ஆபத்துக்குக் காரணமாக மூன்று பேரை அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது. டெல்லியிலிருந்து காத்மாண்டுவுக்கு ஏர் இண்டியா விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலிருந்து தரையிறங்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதியளித்த போது, அதே இடத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நேபாளம் ஏர்லைன்ஸ் விமானமும் பறந்து கொண்டிருந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிவேகமாகத் தரையிறங்கத் தொடங்கியதைக் கண்ட நேபாள விமானத்தின் விமானி, திடீரென தமது விமானத்தை 7 ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே கொண்டு சென்று பாதையை மாற்றினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.