புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பா.ஜ.க. பிரமுகர் படுகொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Mar 27 2023 8:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். பா.ஜ.க பிரமுகரான இவர், அங்குள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் செந்திலை கொலை செய்து விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.