நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை : மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் அடித்தட்டு மக்களுக்கு நன்மை என்றும் தகவல்
Jan 31 2023 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவிய காலகட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுமார் 17 கோடி முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அடுத்த நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்தில் பெண்களின் சுய உதவிக்குழுக்கள் சுமார் 17 கோடி முகக்கவசங்களை உற்பத்தி செய்ததாகவும், வேளாண் துறை வருமானம் 6 புள்ளி 4 டாலர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் அடித்தட்டு மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.