ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : 40 தொகுதிகளில் வெற்றி
Dec 9 2022 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சலப்பிரதேசத்தில், பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், ஆட்சியமைக்கிறது. பா.ஜ.க. ஆட்சியை இழந்தது.
68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
40 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கிறது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஆம் ஆத்மி கட்சி, ஒருஇடத்தில் கூட வெற்றிபெறவில்லை. முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங்கின் மகனான விக்ரம ஆதித்ய சிங், சிம்லா புறநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.