பெரும் எதிர்பார்ப்புடன் குஜராத்தில் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு பலத்த அடி - 5 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி வெற்றி
Dec 9 2022 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெற்றி கிடைக்காதது ஏமாற்றம் என்றாலும் குஜராத் கோட்டைக்குள் நுழைந்ததில் மகிழ்ச்சி என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா கருத்துத் தெரிவித்துள்ளார். அடுத்த முறை கோட்டைக்குள் இருந்தே போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே தேசிய கட்சி என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்துள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தெற்கில் உள்ள மாநில கட்சிகள் விரும்பினாலும் இதுவரை அதனை சாதிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். இமாச்சல் மற்றும் டெல்லி மாநகராட்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டால் பாஜக ஒரு தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் இரண்டில் தோல்வி அடைந்துள்ளதும் தெரிய வரும் என்றும் ராகவ் சதா தெரிவித்தார்.