கர்நாடகா: பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை தெருவில் கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்
Nov 26 2022 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு பகுதியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்தனர். பள்ளி மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞரை கையும் களவுமாக பிடித்து, தெருவில் கட்டி வைத்து உதைத்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.