இந்தியாவின் கருப்பு தினம் என்று வருணிக்கப்டும் நவம்பர் 26, மும்பை தீவிரவாத தாக்குதல் : 14-வது நினைவு தினத்தையொட்டி தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி முனையத்தில் பூக்களை வைத்து மவுன அஞ்சலி செலுத்திய மக்கள்
Nov 26 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவை உலுக்கிய 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் 14-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி தங்களது கோரமுகத்தை காட்டினர். சுற்றுலா பயணிகள் போல வந்த அவர்கள் மும்பை சத்ரபதி ரயில் நிலையம், ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ் என 12 இடங்களில் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் வெளிநாட்டினரும் உயிரிழந்ததால், உலக நாடுகளிலும் மும்பை தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.