மத்தியப்பிரதேசத்தில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி : பிரியங்கா காந்தி, கணவர் ராபர்ட் வதோ உள்ளிட்டோர் பங்கேற்பு
Nov 26 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று 80-ம் நாளை எட்டியுள்ளது. தமிழகத்தின் குமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பயணம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்ட்ரா மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரையில், முதல் முறையாக, மத்தியப்பிரதேச நடைபயணத்தில் சகோதரர் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் இணைந்தார். இன்று 3-ம் நாளாக பிரியங்கா நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பிரியங்காவுடன் அவரது கணவர் ராபட் வத்ராவும் நடைபயணம் மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் ட்ரோன் காட்சி வெளியாகிவுள்ளது.