இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுலுடன் இணைந்து பங்கேற்ற விஜேந்தர் சிங் - இருவரும் மீசையை முறுக்கிக் கொண்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி
Nov 26 2022 9:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டது தொடர்பான நிழற்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத்ஜோடா யாத்ரா என்ற பெயரில் ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் இப்பயணத்தின் போது நேற்று, குத்துச் சண்டை வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான Vijender Singh அவருடன் இணைந்து சிறிது நேரம் நடைபயணத்தில் பங்கேற்றார். அப்போது இருவரும் இணைந்து மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.