ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், உருவம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை
Nov 25 2022 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், உருவம் மற்றும் குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்த டெல்லி
உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பெயர், பேச்சு, உருவம் போன்ற தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நவீன் சாவ்லா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அமிதாப் பச்சன் சார்பில் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார். விசாரணையில் அமிதாப் பச்சன் சார்பிலான கோரிக்கையை கேட்டறிந்த நீதிபதி, அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதி இல்லாமல், விளம்பரம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். அமிதாபின் அனுமதியின்றி அவரது பெயரை பயன்படுத்துவது சில நேரங்களில் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுவதாக நீதிபதி கூறினார்.