மேகாலயாவில் பதற்றத்தை தணிக்க கைபேசி இணைய வசதி துண்டிப்பு : மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அஸ்ஸாமிற்குள் நுழைய தடை
Nov 25 2022 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஸ்ஸாம் - மேகாலயா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், மேகாலயாவில் பதற்றத்தை தணிக்க கைபேசி இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாம் பதிவெண் கொண்ட வாகனங்கள் மேகாலயாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அஸ்ஸாமிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், அஸ்ஸாம் மாநில போலீசாருக்கும், மேகாலயா எல்லை ஓர கிராம மக்களுக்கும் இடையே, மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற சண்டையில் அஸ்ஸாம் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர். இச்சம்பவத்தால், இரு மாநிலங்கள் இடையேயும் பதற்றம் அதிகரித்துள்ளது.