டெல்லியில், பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊழல்... லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
Nov 25 2022 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள 193 அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 405 கூடுதல் வகுப்பறைகள் கட்டியதில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு இந்த ஊழலை செய்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், மாநில தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.