ராஜஸ்தானில் கெலாட் - பைலட் இடையே முற்றும் மோதல் சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை முயற்சி
Nov 25 2022 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே முற்றியுள்ள மோதலை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அஷோக் கெலாட், 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொடி பிடித்து தனது ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் சச்சின் பைலட் என்று குற்றம் சாட்டினார். இதற்கு சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 2 தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.