வழக்குகளை விசாரணைக்காக பட்டியலிடுவது மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்குகிறது : ஒரு நாளைக்கு ஒவ்வொரு அமர்வு நீதிபதிகளும் 45 முதல் 50 வழக்குகளை கையாளுகின்றனர்
Nov 25 2022 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வழக்குகளை விசாரணைக்காக பட்டியலிடுவது என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில், அதிக வேலை பளுவாக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திச்சூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இன்றைய அலுவல் நேரம் தொடங்கியவுடன் வழக்கின் விசாரணையை விரைந்து பட்டியலிட வழக்கறிஞர் ஒருவர் முறையிட்ட போது, அடுத்த வாரம் 13 அமர்வுகளின் நீதிபதிகள் முன்பாக 525 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஒவ்வொரு அமர்வு நீதிபதிகளும் 45 முதல் 50 வழக்குகளை கையாள்வதாகவும் கூறினார். எனவே "விரைந்து" என்ற வார்த்தை மிகப்பெரிய மன அழுத்தத்தை தருவதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது, தன் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால், நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்து முடிப்பது தான் என சந்திரச்சூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.