கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Oct 6 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு பள்ளி பேருந்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்பட 51 பேர் இருந்தனர். இந்நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுற்றுலா பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், 5 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.