மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளா்ச்சி சாத்தியம் -ஹிமாசல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு
Oct 6 2022 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளா்ச்சி சாத்தியம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூா் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி ஆகியவற்றை பிரதமா் மோடி திறந்து வைத்தார். அதனைத்தொடா்ந்து அந்த மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியிலும், ஹிமாசல பிரதேசத்திலும் ஆட்சியில் அமர ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்ததால், ஹிமாசல பிரதேசத்தில் வளா்ச்சி சாத்தியமாகியுள்ளது என்றார். நாட்டில் முதல் மாநிலமாக ட்ரோன் கொள்கையை வகுத்த ஹிமாசல பிரதேசத்துக்குப் பாராட்டுகளை தெரிவித்தார். ஏழைகளும், நடுத்தர மக்களும் சுமுகமாக வாழ்வதை மத்திய அரசு உறுதி செய்து வருவததாகவும் மோடி அப்போது குறிப்பிட்டார்.