புதுச்சேரியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை கிடங்கில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - ஜன்னலை உடைத்து மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு
Aug 18 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலை கிடங்கின் ஜன்னலை உடைத்து பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு மெயின் ரோட்டில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கின் முதல் தளத்தின் உள்ள அறையில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பிலான நீர் மோட்டார் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ நடந்த இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீசார் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தனியார் சிமெண்ட் தொழிற்சாலை கிடங்கின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.