ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் - சில மணி நேரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததால் கட்சியில் சலசலப்பு

Aug 18 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திரு. குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. குலாம் நபி ஆசாத், நேற்று ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தான் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார். பிரசாரக் குழு தலைவர் பதவி மட்டுமின்றி, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக கருதியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவரை, தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலில் இறக்கியதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்களில் ஒருவராக குலாம்நபி ஆசாத் இருந்து வருகிறார். இவரது அதிருப்தியை வெளிப்படையாகவும் பலமுறை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00