தேசப்பற்றை ஒருபோதும் விற்கக்கூடாது : ராகுல் கடும் தாக்கு
Aug 11 2022 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏழைகளின் சுயமரியாதையை புண்படுத்தி, தேசப்பற்றை பா.ஜ.க. கூறுபோட்டு விற்பதாக திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரேஷன் பொருட்கள் வாங்கும் ஏழைகளிடம் தேசியக்கொடிக்காக கடைக்காரர்கள் கூடுதலாக 20 ரூபாய் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் வெட்கக் கேடானது என்றும், தேசப்பற்றை ஒருபோதும் விற்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் மூவர்ணக் கொடியை மட்டுமின்றி ஏழைகளின் சுய மரியாதையையும் பா.ஜ.க. புண்படுத்தி வருவதாக திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.