ப்ளாக் மேஜிக் மூலம் பொதுமக்களின் மனங்களை வெல்ல முடியாது- காங்கிரஸ் கட்சியினரின் ஆகஸ்ட் 5 போராட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்
Aug 11 2022 8:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Black magic மூலம் மக்களின் நம்பிக்கையை ஒருநாளும் பெற முடியாது என காங்கிரஸ் கட்சியினரைத் தாக்கி பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் எத்தனால் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸார் நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்டு, மாந்த்ரீகம், சூனியம் போன்ற செயல்களால் இந்திய மக்களின் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது என்றார். இலவசங்கள் வழங்கும் அரசியலில் ஈடுபடும் சில எதிர்க்கட்சிகள், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.