அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் : விமானப்படையில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு
Jul 6 2022 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 7 லட்சத்து 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாட்டின் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி செய்யும் வகையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த போதும், அதிலிருந்து பின்வாங்காத அரசு, அக்னிபத் திட்டத்திற்கு ஆள் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 24-ம் தேதி, விமானப்படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருப்பதாக விமானப் படை கூறியுள்ளது. இதுவரை விமானப்படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.