இந்தியாவில் 1.15 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை : கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு புதிதாக தொற்று உறுதி
Jul 6 2022 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 159 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 706-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 270-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1 லட்சத்து 15 ஆயிரத்து 212 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 29 லட்சத்து 7 ஆயிரத்து 327 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 394 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 198 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 763 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.