கேரளாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Jul 5 2022 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு சாதாரணமாக பெய்த மழை அதன்பின்பு தீவிரம் அடைந்தது. பின்னர் மீண்டும் லேசாக பெய்து வந்த மழை தற்போது மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக கேரளாவின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.