மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - பஹல்காம் முகாமிலிருந்து குகைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை
Jul 5 2022 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் குகைக் கோயிலை நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
அமர்நாத் யாத்திரை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 43 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் வரும் ஆகஸ்டு 11-ம் தேதி முடிவடைகிறது. கடந்த 5 நாட்களில் 65 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், 6 ஆயிரத்து 351 பக்தர்கள், பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாம்களிலிருந்து யாத்திரைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்ததும் யாத்திரை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.