கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு முதல் பியூசி மாணவர்களுக்கு சீருடை கட்டாயமானது
May 20 2022 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு முதல், பியூசி மாணவர்களுக்கு, சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சமத்துவம், ஒற்றுமை, பொது ஒழுங்கை கடைபிடிக்கும் நோக்கில், 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல், பியூசி மாணவ-மாணவிகள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் எனவும், ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடை அணிந்துவர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.