தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற பணிகள் : பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் காணொலியில் உரை
May 20 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 ஆண்டு கால ஆட்சியில், தேசத்திற்கு சேவை செய்ததோடு, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பிரதமர் திரு. மோடி பெருமித தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்வதாகவும், 8 ஆண்டுகளில் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டில் பெண்களின் அதிகாரத்தை மத்திய அரசு வலுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து வருவதாகவும், அனைத்து சவால்களையும் கடந்து இந்திய மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.