ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து : 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்
May 20 2022 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பானின் மேக்கர்கோட் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் ஊழியர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகளில் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் ஈடுபட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் திரண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.