சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் : உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சிறையிலிருந்து விடுவிப்பு
May 20 2022 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அசம் கானுக்கு எதிராக ஊழல், முறைகேடு, கிரிமினல் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 81 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் பல வழக்குகளில் ஜாமீன் கோரி அசம் கான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை 2 வாரத்தில் நாடி முறையான ஜாமீனை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஆசம் கானின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, உத்தரப்பிரதே மாநிலம், சீதாபூர் மாவட்ட சிறையில் இருந்து அசம்கான் இன்று விடுவிக்கப்பட்டார். இதனையொட்டி, சிறைச்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.