ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்கும் திட்டம் இல்லை : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்
May 20 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்கும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைப்பர் லூப் திட்டத்திற்கு எட்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புறநகர் ரயில்கள் குளிர்சாதன பெட்டிகளாக மாற்றும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.