வீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் டெல்லி அரசின் திட்டம் : தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்
May 19 2022 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் வீடு தேடி ரேசன் பொருட்கள் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரேசன் பொருட்கள் விநியோகஸ்தர்கள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது டெல்லி அரசுக்கு நல்லதொரு திட்டமாக இருந்தாலும், மத்திய தொகுப்பில் இருந்து பெறும் பொருட்களை, வீடு தேடி சென்று வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இத்திட்டத்துக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் இத்திட்டத்தை மாற்றம் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. இதனையடுத்து, ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.