தீவிரவாத குழுக்‍களுக்‍கு நிதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்‍கில் யாசின் மாலிக்கிற்கு தண்டனை - விவரம் வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு

May 19 2022 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்; தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்; காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனிடையே, கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் வரும் 25-ம் அறிவிக்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00