தீவிரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக்கிற்கு தண்டனை - விவரம் வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு
May 19 2022 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்; தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்; காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனிடையே, கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் வரும் 25-ம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.