மதுராவிலும், அயோத்தியிலும் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் உள்ளார் : நடிகை கங்கனா ராவத் பேட்டி
May 19 2022 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுராவிலும், அயோத்தியிலும் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் உள்ளார் என நடிகை கங்கனா ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் நடைபெற்ற கள ஆய்வில் மசூதி வளாகத்தில் சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியை சீலிட்டு மூட வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ராவத், மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணரும், அயோத்தியின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணரும் உள்ளனர் என தெரிவித்தார். அதேபோல், காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமான் இருக்கிறார் என்றும், அவருக்கு ஒரு அமைப்பு தேவையில்லை, ஒவ்வொரு துகளிலும் அவர் வசிக்கிறார் எனவும் அவர் கூறினார்.