டெல்லியில் மருத்துவமனையில், மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்
May 19 2022 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி Lady Hardinge மருத்துவமனை மருத்துவர்கள், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள Lady Hardinge மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நேற்று பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவர் உள்பட சில மருத்துவரை, நோயாளியின் உறவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு ஹார்டிங்கே மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனையின் முக்கியப் பகுதிகளில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ஒரு உறவினர் என்ற முறையை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தீவிர சிகிச்சைப் பிரிவு உள்பட எவ்வித பணிக்கும் மருத்துவர்கள் செல்லமாட்டார்கள் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.