கேரளாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : கோழிக்கோடு, வயநாடு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

May 18 2022 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், வயநாடு, கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, கேரளாவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கேரளாவில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த மூன்று நாட்களுக்கு தொடருமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள கடற்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00