பிரச்சனைகளை திசை திருப்பவே மதஸ்தலங்கள் மீது குறி : பா.ஜ.க மீது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு
May 18 2022 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலையில்லா திண்டாட்டம், உயர்ந்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத ஸ்தலங்களை மத்திய பா.ஜ.க. அரசு குறிவைப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வி மாயாவதி, ஞானவாபி, மதுரா, தாஜ்மஹால் போன்ற இடங்களைச் சாக்காக வைத்து, மக்களின் மத உணர்வுகளை சதித்திட்டத்தின் கீழ் பா.ஜ.க. தூண்டுவதாக குற்றம்சாட்டினார். இந்த நடவடிக்கை நாட்டை வலுப்படுத்தாது என்பதை பாஜக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், உயர்ந்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே, மத ஸ்தலங்களை மத்திய பா.ஜ.க. அரசு குறிவைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நிலைமை பாதிக்கப்படலாம் எனவும் செல்வி மாயாவதி எச்சரித்துள்ளார்.