350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தகர்த்த பிரமோஸ் ஏவுகணை
May 13 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை, நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வங்ககடலில், சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. இதுவரை 290 கிலோமீட்டர் ஆக இருந்த பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம், 350 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.