பறவைகளுக்காக கூடுகள் கட்டித்தரும் தன்னார்வலர் 2.50 லட்சம் கூடுகள் கட்டி சாதனை - லிம்கா புத்தகத்தில் பதிவு

Feb 7 2022 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், பறவைகளுக்‍கு இதுவரை இரண்டரை லட்சம் கூடுகளை கட்டிக்‍கொடுத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த தன்னார்வலரான திரு. ராகேஷ் கத்ரி என்பவர், பறவைகளுக்‍கு கூடுகள் கட்டுவதை சிறுவயது முதலே செய்து வருகிறார். சணல், புல், பிளாஸ்டிக், மரக்‍கட்டைகள் போன்றவற்றை கொண்டு அவர் கூடுகளை கட்டி வருகிறார். அவரிடம் இதுவரை 10 லட்சம் மாணவர்கள், கூடுகள் கட்டுவது குறித்து பயிற்சி எடுத்துக்‍கொண்டுள்ளனர். அதன்படி, மாணவர்களும், தங்கள் வீட்டு மாடியிலும், தோட்டத்திலும் கூடுகள் கட்டி வருகின்றனர். தற்போது வரை இரண்டரை லட்சம் கூண்டுகள் கட்டியுள்ள திரு. ராகேஷ் கத்ரி, இதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் இவரைப்பற்றிய பாடம், சிபிஎஸ்சி 4-ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் கூடுகள் கட்டிவிட்டால், பறவைகள் வந்துவிடுமா என ஆரம்பத்தில் திரு. ராகேஷ் கத்ரியை கேலி செய்தவர்கள், அவர் கட்டிய கூடுகளுக்‍கு பறவைகள் வரத்தொடங்கியதும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00