இந்தியாவில் சமூகப் பரவலாக மாறியது ஒமைக்ரான் - சார்ஸ் -கோவிட் ஆய்வு கூட்டமைப்பு தகவல்
Jan 23 2022 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் சமூகப் பரவலாக மாறிவிட்டது என சார்ஸ்-கோவிட் ஆய்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வகை வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் அலையை விட, கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல், சமூகப்பரவலாக மாறிவிட்டது என Indian SARS-COV-2 Genomics Consortia எனப்படும், சார்ஸ்-கோவிட் ஆய்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவுக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும், தடுப்பூசி செலுத்துவதுமே தற்காத்துக் கொள்ள ஒரே வழி என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.