முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் - ஜிப்மர் நிர்வாகத்தின் உத்தரவு மக்களை ஏமாற்றும் வேலை : புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Jan 23 2022 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்ற ஜிப்மர் நிர்வாகத்தின் உத்தரவு மக்களை ஏமாற்றும் வேலை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், டெலிமெடிசின் என்ற போர்வையில் ஜிப்மர் நிர்வாகம் ஏமாற்றுவதாகவும், பேரிடர் காலத்தில் மருத்துவம் பார்க்க வேண்டியதுதான் மருத்துவமனையின் வேலை என்றும் தெரிவித்தார்.