நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - நேதாஜியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் வாழ்த்து
Jan 23 2022 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில், அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துவதாக கூறியுள்ளார். சுதந்திர இந்தியா - ஆசாத் ஹிந்த் - என்ற தனது கடுமையான உறுதிப்பாட்டை நிறைவேற்ற நேதாஜி எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியதாக தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தலை வணங்குவதாகவும், நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.