இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது
Jan 23 2022 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 525 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி 21 லட்சத்து 87 ஆயிரத்து 205 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 161 கோடியே 92 லட்சத்து 84 ஆயிரத்து 270 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.